புதுதில்லி, நவ.8-
இந்தியாவை வாங்க முயற்சிக்க வேண்டாம் என்று அமெரிக்க ஜனாதி பதியை வலியுறுத்தியும் இந்தியாவை அமெரிக்காவின் இளைய பங்காளியாக் காதே என்று காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசை வலியுறுத்தியும் கண்டன முழக்கத்துடன் நாடு முழுவதும் நவம்பர் 8 திங்களன்று நாடு முழுவதும் இடதுசாரி கட்சிகள் ஆவேசமிக்க ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டன.
அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் பிரதிநிதியாக இந்தியா வந்துள்ள ஜனாதி பதி ஒபாமாவின் வருகையை எதிர்த்து நடைபெற்ற இந்த மகத்தான இயக்கத் தின் ஒரு பகுதியாக பல்வேறு மாநிலங்களில் பெருந்திரள் ஆர்ப்பாட்டங்கள், கண்டனப்பேரணிகள் உட்பட பல்வேறு வடிவங்களில் போராட்டம் நடைபெற்றது.
புதுதில்லி
ஒபாமா வருகையை எதிர்த்து, இடதுசாரிக் கட்சிகள் சார்பில், நாடாளுமன்ற வீதியில், ஜந்தர்மந்தர் அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பொதுச் செயலாளர் பிரகாஷ்காரத், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பொதுச் செயலாளர் ஏ.பி. பரதன், அகில இந்திய பார்வர்ட் பிளாக் பொதுச் செயலாளர் தேவ பிரத பிஸ்வாஸ், புரட்சிகர சோசலிஸ்ட் கட்சி சார்பில் அபானிராய் ஆகியோர் கண்டன உரையாற்றினார்கள். அப்போது அவர்கள் அமெரிக்கா, உலக மேலாதிக்க வல்லமையை நிறுவுவதின் ஒரு பகுதியாக, நாடுகளின் இறையாண்மை மற்றும் பல்வேறு நாட்டு மக்களின் நலன்கள் பாதிக்கக்கூடிய வகையில் கொள்கைகளைப் பின்பற்றிக் கொண்டிருக்கிறது என்றும், இந்தியாவுடன் ராணுவ அணிச்சேர்க்கை என்ற பெயரில் மக்களுக்குத் தீங்கு இழைக்கக்கூடிய விதத்தில் பொருளாதாரக் கொள்கைகளை கடைப்பிடித்திட வேண்டும் என்று இந்தியாவை நிர்ப்பந்தித்துக் கொண்டிருக்கிறது என்றும் குற்றம் சாட்டினர்.
மேலும், போபால் நச்சுவாயு விபத்தில் பலியானவர்களுக்கு நீதி வழங்கக் கோரியும், டவ் கெமிக்கல்ஸ் நிறுவனம் உரிய இழப்பீட்டை அளித்திடவும், தொழிற்சாலை வளாகத்தைச் சுத்தப்படுத்தித்தரவும் நடவடிக்கைகள் எடுத்திட வேண்டும் என்றும், போபால் வழக்கில் விசாரணையை எதிர் கொள்வதற்காக வாரன் ஆண்டர்சனை இந்தியாவுக்கு அனுப்பி வைத்திட வேண்டும் என்றும் வலியுறுத்தினார்கள்.
இந்தியாவின் அயல்துறைக் கொள்கை எப்படி இருக்க வேண்டும் என்று அமெரிக்கா நிர்ப்பந்தம் அளிப்பதை நிறுத்த வேண்டும். அமெரிக்க மூலதனம் மற்றும் பன்னாட்டு நிறுவனங்கள் கொள்ளையடிப்பதற்காக வேளாண்மை, சில்லரை வர்த்தகம், கல்வி மற்றும் இதர சேவைகளைத் திறந்துவிட நிர்ப்பந்தம் அளிப்பதை நிறுத்த வேண்டும். இந்தியாவை, அமெரிக்காவின் ராணுவப் பங்காளியாக மாற்ற வகை செய்யும் இந்திய - அமெரிக்க பாதுகாப்பு வடிவமைப்பு ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும், இராக்கில் இருத்தி வைக்கப்பட்டுள்ள மீதமுள்ள 50 ஆயிரம் துருப்புக் களையும் உடனடியாக திரும்பப் பெற வேண்டும், கியூபா மீதான பொருளா தாரத் தடையை நீக்கிட வேண்டும் என்று வலியுறுத்தியும், பாலஸ்தீனம் மற்றும் அரபு நிலப்பகுதிகளில் மேற்கொண்டுள்ள ஆக்கிரமிப்புகளை விட்டு இஸ்ரேல் வெளியேறும் வரை அதற்கு அளித்திடும் அனைத்து உதவிகளையும் நிறுத்தக் கோரியும் வலியுறுத்தினார்கள்.
ஆர்ப்பாட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலை மைக்குழு உறுப்பினர்கள் எஸ்.ராமச்சந்திரன் பிள்ளை, சீத்தாராம் யெச்சூரி எம்.பி., கே. வரதராசன், மத்தியக்குழு உறுப்பினர்கள் சுனீத் சோப்ரா, நூருல் ஹூடா, தபன்சென், பாசுதேவ் ஆச்சார்யா, ஹன்னன்முல்லா உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டார்கள்.
தமிழகம்
தமிழகத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, பார்வர்டு பிளாக் ஆகிய இடதுசாரி கட்சிகள் கூட்டாக பெரும் ஆர்ப் பாட்டத்தில் ஈடுபட்டன.
சென்னையில் நடைபெற்ற மாபெரும் கண்டன இயக்கத்தில் ஆர்.நல்ல கண்ணு, ஜி.ராமகிருஷ்ணன், பி.வி.கதிரவன் உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்று முழக்கமிட்டனர்.
தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் நூற்றுக்கணக்கான மையங்களில் பல்லாயிரக்கணக்கானோர் செங்கொடி ஏந்தி, ஒபாமா வருகைக்கு எதிராக கண்டனம் முழங்கினர்.
புதுச்சேரியில் சிபிஎம், சிபிஐ, சிபிஐ(எம்எல்), பார்வர்டு பிளாக், ஆர்எஸ்பி சார்பில் தலைமை அஞ்சல் நிலையம் அருகில் ஆயிரக்கணக் கானோர் பங்கேற்ற மாபெரும் கண்டன இயக்கம் நடைபெற்றது.
கேரளா
கேரள தலைநகர் திருவனந்தபுரத்தில் மாணவர்கள் பெரும் போராட்டத் தில் ஈடுபட்டனர். இந்திய மாணவர் சங்கத்தின் தலைமையில் பல்லாயிரக் கணக்கான மாணவிகள் பல்கலைக்கழக கல்லூரி முன்பு குவிந்தனர். அங் கிருந்து தலைமைச் செயலகம் நோக்கி பிரம்மாண்ட பேரணியை நடத்தினர்.
மாநிலம் முழுவதும் இடது ஜனநாயக முன்னணி பெரும் பேரணி களையும், கண்டன இயக்கத்தையும் நடத்தியது.
மேற்குவங்கம், திரிபுராவிலும் லட்சக்கணக்கான மக்கள் பங்கேற்ற ஏகாதிபத்திய எதிர்ப்புப்பேரணிகள் நடைபெற்றன.
ஆந்திரா, மகாராஷ்டிரா, பீகார், பஞ்சாப், ராஜஸ்தான் உள்ளிட்ட அனைத்து மாநிலங்களிலும் இடதுசாரி கட்சிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டன
No comments:
Post a Comment